மாடும் புலியும் | தமிழ் கதைகள் | Cow And Tiger | Cow Moral Story In Tamil

மாடும் புலியும் | தமிழ் கதைகள் | Cow And Tiger | Cow Moral Story In Tamil

முன்பொரு காலத்தில் ஒரு கிராமத்துல ஒரு மாடு ஒன்னு இருந்தது. அந்த மாடு எல்லோரோடும் ரொம்ப நட்பாகவும், ரொம்ப உதவி செய்யும் குணத்துடனும் பழகி வந்தது. அது தன் முதலாளி பேச்சைக் கேட்டு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள் அந்த மாடு காட்டுக்கு சென்று புற்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. 

அப்போது ஒரு புலி அந்த மாடை பார்த்து அதை வேட்டையாட நினைத்தது. புலி தன்னை தாக்க வருவதைக் கவனித்த மாடு ரொம்ப அமைதியாக பயத்தை விட்டு புலியிடம் பேச துவங்கியது. 

Tiger

“புலியாரே! எனக்கு ஒரு கண்ணு குட்டி இருக்கு. அது இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிறந்தது. அதுக்கு புல்லை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூட தெரியாது. நான் திரும்பி போகவில்லை என்றால் அவனால் பால் குடிக்க முடியாது. அதனால் நீங்க அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் போய் பால் குடுத்துட்டு திருப்பி இங்கே வந்துடுவேன். அப்புறம் நீங்க என்னை சாப்பிடலாம்” என்றது. 

மான் சொன்னதைக் கேட்டு புலி சத்தமாக சிரித்துவிட்டு சொன்னது “என்னிடம் இருந்து தப்பித்து செல்ல நீ பொய் சொல்கிறாய். நான் முட்டாள் என்று நீ நினைக்கிறாயா!” என்றது மூர்க்கமான புலி. 

அதற்கு மாடு புலி கிட்ட ரொம்ப கெஞ்சி சொன்னது “இல்லை, இல்லை நான் பொய் சொல்லவில்லை பொய் சொல்வதைவிட செத்தே போயிவிடலாம். எல்லோரும் ஒரு நாள் செத்துத் தான் போக வேண்டும். இன்றைக்கு உங்க பசிக்கு கண்டிப்பாக நான் சாப்பாடாக இருப்பேன் தயவுசெய்து என்னை ஒரு முறை போக விடுங்கள் நான் என் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உடனே திரும்பி வந்துடுவேன். இது தான் என் கடைசி ஆசை” என்றது. 

cow story

அதற்கு புலி கொஞ்ச நேரம் விட்டு அந்த காட்டுல் இருக்கின்ற விலங்குகள் எல்லாம் எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நினைத்தது. அதனால் மாடு தன் குட்டிக்கு பால் கொடுக்க அனுமதித்தது புலி. 

உடனே பசு மாடு தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன் குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு அதனிடம் சொன்னது “என்னோட செல்ல குட்டியே! நீ நல்லா இருந்து எல்லாருக்கும் உதவி செய்யணும், யாரிடமும் பொய் சொல்லகூடாது. நீ எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும்” என்றது. 

பின்னர் தன் வார்த்தையைக் காப்பாற்ற காட்டுக்கு திரும்ப சென்று புலியின் முன்னாடி நின்றது. மாடை பார்த்ததில் புலிக்கு ஒரே ஆச்சரியம். அந்நேரம் புலி யோசித்தது இந்த மாடு தன் வாழ்க்கையை விட அது சொன்ன வார்த்தைகளுக்கு ரொம்ப மதிப்பு கொடுக்கிறது. 

cow and cow baby

இந்த மாடுக்கு தீங்கு கொடுப்பது ரொம்ப தவறு என்று யோசித்தது. “நீ உன்னுடைய நேர்மையை நிரூபித்து விட்டாய். நீ சந்தோஷமாக சென்று உன் குழந்தை கூட வாழ் இனிமேல் என்னால் உனக்கு எந்த தீங்கும் வராது” என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டது. உடனே அந்த மாடும் தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன் குட்டியுடன்  மகிழ்ச்சியாக வாழ்ந்து. 

இந்த கதையோட நீதி என்னவென்றால்  நீங்க உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், நல்ல நிலைமைக்கும் செல்ல முடியும். 



Leave a Comment