வெங்காயம் கதை | Onion story | Tamil short story

வெங்காயம் கதை | Onion story | Tamil short story

நாம எல்லோரும் வெங்காயம் வெட்டும் போது எதுக்கு அழுகுறோம்னு தெரியுமா! அதுக்கு பின்னாடி ஒரு வேடிக்கையான கதை இருக்கு. இந்த கதையில் அத பத்தி தெரிஞ்சுக்கலாம்.

ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒரு அழகான நகரத்தில் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில்  முதல் ஆள் தக்காளி, இரண்டாவது ஐஸ் கிரீம், மூன்றாவது ஆள் வெங்காயம். 

அந்த நகரத்தில் குளிர் காலம் வந்துருச்சு, மூன்று நண்பர்களும் ஒன்றாக விளையாடி ரொம்ப சந்தோஷமா இருந்தார்கள். எங்க போனாலும் ஒன்றாகத் தான் சந்தோஷமா போவார்கள். 

Ice cream

மெதுவாக பருவங்கள் மாற தொடங்கிடுச்சு. கடைசியா கோடைக் காலம் வந்தது. ஒரு நாள் மூணு பேரும்  ஒரு பார்க்குக்கு சென்று விளையாட நினைச்சாங்க. 

கோடைகாலத்தில் காலநிலை எப்படி இருக்குன்னு ஐஸ்கிரீமுக்கு சுத்தமா தெரியாது. தான் நண்பர்களுடன் விளையாட ஐஸ்கிரீம் வீட்டை விட்டு வெளிய வந்துருச்சு.

கொஞ்ச நேரம் கழிச்சு ஐஸ்கிரீம் தன்னோட உடல் உருகுவதை உணர்ந்தது. தன்னோட நண்பன் நிலைமையை பார்த்து தக்காளியும், வெங்காயமும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்னாங்க. 

ரொம்ப விரைவா ஐஸ்கிரீம் மொத்தமாக உருகிப்போனது. மத்த இரண்டு பேரும் அழுதுகொண்டே வீட்டுக்கு போக ஆரம்பிச்சாங்க. அவங்க வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு சின்ன பையன் ஒரு பாந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

Tomato

அந்த பையன் தக்காளியும், வெங்காயமும் தன் வழியில் வருவதை கவனிக்கல. அவன் தெரியாம தக்காளி வந்து கொண்டிருந்த திசையை பார்த்து பந்தை ரொம்ப வேகமாக வீசினான். 

வெங்காயம் அந்த பந்தை தடுக்க முயற்சி பண்ணிச்சு. ஆனா அதால முடியல. அந்த பந்து வேகமா வந்து தக்காளி தலையில கடினமாக பட்டிச்சு. 

இதனால தக்காளி கீழ விழுந்து நசுங்கி போயிடுச்சு. அந்த ராத்திரி வெங்காயம் தன்னோட இரண்டு நண்பர்களை நினைச்சு ரொம்பவே சோகமா ஆயிடுச்சு. ஒண்ணுமே சாப்பிடல. 

அது கடவுள் கிட்ட கேட்டுச்சு “கடவுளே என்னோட சிறந்த நண்பர்கள் இப்போ என்னோட இல்ல. நான் இப்போ இங்க தனியா அவங்களுக்காக அழுதுக்கிட்டே இருக்கேன். 

Onion tamil short story

நாளைக்கு எனக்கு எதாவது ஆனா எனக்காக அழுறதுக்கு யாருமே இல்ல.” என்று கேட்டது. அப்ப வெங்காயம் வானத்தில் இருந்து ஒரு வெளிச்சம் வருவத பாத்துச்சு. 

அந்த வெளிச்சத்தில் இருந்து ஒரு குரல் வந்து சொன்னது. “வெங்காயமே, கவலைப்படாதே உனக்கு நாளைக்கு ஏதாவது ஆச்சுன்னா கண்டிப்பா உன்ன சுத்தி இருக்குற எல்லாரும் அழுவாங்க.” என்று வெங்காயத்துக்கு இந்த வரத்தை கொடுத்துவிட்டு அந்த குரல் போயிடுச்சு. 

அன்றிலிருந்து யார் வெங்காயம் வெட்டினாலும் அந்த வெங்காயத்திற்காக அழுதார்கள். 😂😂😂



Leave a Comment