அம்மா கதை | தமிழ் கதைகள் | moral stories in tamil to read

அம்மா கதை | தமிழ் கதைகள் | moral stories in tamil to read

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்துல ஒரு குழந்தை பிறக்க இருந்தது. குழந்தை பிறக்க இருக்கும் கொஞ்ச நேரம் முன்னாடி குழந்தைக்கு ஒரு சந்தேகம் வந்தது.

“நான் ரொம்ப சின்ன குழந்தை நான் எப்படி இந்த உலகத்தில் வாழ்வது. அதனால் தயவு செய்து நான் உங்களுடன் இருக்கேன். எனக்கு எங்கயும் போக புடிக்கல” அப்படின்னு குழந்தை கடவுள்கிட்ட சொன்னது.

அப்போ கடவுள் அந்த குழந்தையிடம் “அன்பான குழந்தையே! என்கிட்ட நிறைய தேவதைகள் இருக்காங்க அதுல உனக்கு ஒரு தேவதையை கொடுத்து இருக்கேன் அவங்க உன்ன நல்லா பாத்துப்பாங்க அதனால நீ கவலை படாதே” என்று சொன்னார் கடவுள். 

heaven

“ஆனால் சொர்க்கத்திலே நான் சிரிப்பதையும், பாடுவதையும், விளையாடுவதையும் தவிர எதுவுமே பண்ணல. இது போதாதா நான் சந்தோஷமா இருக்க” அப்படின்னு கேட்டதுக்கு குழந்தை. 

“உன்னை கவனிக்கிற தேவதை உனக்காக பாடுவாங்க, உன்னோட விளையாடுவாங்க, உன்னை சந்தோஷப்படுத்துவாங்க. அவங்க கொடுக்கிற அதிகமான அன்பும், பாசமும்தான் உன்னை ரொம்ப சந்தோஷப்படுத்தும்” என்றார் கடவுள்.

“அன்பான கடவுளே அவங்க பேசும் மொழி எனக்கு தெரியாது என்னால எப்படி அவர்களை புரிஞ்சுக்க முடியும்” அப்படின்னு கேட்டுச்சு குழந்தை. 

“அவங்க அன்பாகவும், நல்ல வார்த்தைகளும் தான் பேசுவாங்க. அந்த பாசமான வார்த்தைகளை நீ சொர்க்கத்தில் கூட கேட்டிருக்க மாட்ட. உன் கூட பேச மட்டும் செய்யாமல் எப்படி மத்தவங்ககிட்ட சுலபமா பேசுறது என்று சொல்லியும் கொடுப்பாங்க.” என்றார் கடவுள். 

mom

“உங்களோட மறுபடியும் பேசனும்னு நினைச்சா நான் எப்படி பேசுவேன்” அப்படின்னு கேட்டுச்சு குழந்தை. “அந்த தேவதை உன் கைகளைப் பிடித்து எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லி தருவாங்க. அதுமட்டுமில்லாம என்ன பத்தி உனக்கு நிறைய சொல்லி தருவாங்க. நீ எப்போ வேண்டுமோ அப்போ என்கிட்ட பிரார்த்தனை மூலம் பேசலாம்” என்று கடவுள் சொன்னார். 

“நான் கேள்விப்பட்டேன் அங்கு நிறைய கெட்ட மனிதர்கள் இருப்பார்களாமே அப்போ அவங்க கிட்ட இருந்து என்னை யாரு காப்பாத்துவாங்க” என்று கேட்டுச்சு குழந்தை.

அப்போ கடவுள் சொன்னாரு “கவலைப்படாத செல்லம் அந்த நேரத்துல உன்னோட தேவதை உன்னை காப்பாத்துவாங்க உனக்காக அவங்க வாழ்க்கை கூட தியாகம் செய்ய தயங்க மாட்டாங்க” 

அந்த நேரம் பூமியில் இருந்து ஒரு சின்ன சத்தம் கேட்டுச்சு அப்போ அந்த குழந்தைக்கு தான் சொர்க்கத்தை விட்டு வெளியே போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புரிஞ்சுது.

baby

உடனே குழந்தை அழுது கிட்டே “அன்பான கடவுளே நான் இப்ப அங்க போன அந்த தேவதையை எப்படி கூப்பிடனும், அவங்க பேரு கூட எனக்கு தெரியாது” அப்படினு கடவுள் கிட்ட கேட்டதுக்கு கடவுள் “அவங்க பேரு என்னவாக இருந்தாலும் நீ அவங்களை அம்மானு தான் கூப்பிடனும்னு” சொல்லிட்டு கடவுள் மறைந்து போயிட்டாரு. 

இதை எல்லாமே கேட்டதுக்கு அப்புறம் குழந்தை ரொம்ப சந்தோஷத்துடன் பூமியில் இருக்கும் தன் அம்மாவிடம் பத்திரமா சேர்ந்துச்சு. 

அம்மா ரொம்ப அற்புதமானவங்க, அம்மா எப்பவுமே நம்மள ரொம்ப நல்ல கவனிச்சுபாங்க அப்புறம் பத்திரமா பாத்துப்பாங்க. இந்த உலகில் அம்மா மாதிரியான தேவதைகள் யாரும் இல்லை.



Leave a Comment